Tuesday, September 6, 2011

மௌனம் ஒரு தவம்





வாய்ப்பேச முடியாததை - ஒரு
குறையாக நினைத்ததில்லை - என்றும்
பேசுவதை விட
மௌனமே மேலானது

ஊமை என்ற கேளியம்
ஊனம் என்ற கிண்டலும்
என் செவிகள் தாண்டி - மனம்
உள்ளே சென்றதில்லை

வாய்ப் பேசமுடியாமையை
ஒரு வரமாகவே நினைத்தேன்
வீண்ப் பேச்சுக்கள் , வெட்டி அறட்டைகள்
ஏதும் எனக்கு தெரியாது

 நான் சொல்ல நினைப்பதை
ஒரு சிறுப் புன்னகையும்
என் விரல் அசைவுகளும் சொல்லிவிடும்.
தினமும் மவ்ன விரதம் இருக்கும் - தேவதை நான்

மௌனம் ஒரு தவம்
மௌனம் ஒரு சாதனம்
மௌனம் ஒரு யாகம்
மௌனம் ஒரு வழிப்பாடு

முதல் முதலின் 
நான் ஊனம் , நாம் ஊமை , நான் குறை உள்ளவள்
என்று எனக்கு தோன்றுகிறது

என்னை நினைத்து 
முதன் முதலில் வருந்துகிறேன்
நான் ஏன் பிறந்தேன் - என்று
என்னையே நான் சபிக்கிறேன்

அழுகின்ற உன்னை
சமாதானப் படுத்த முடியாமல்
ஆறுதல் சொல்ல முடியாதவளாய்
கண்ணீர் மட்டும் சிந்தும் - மரமானேன் 

என் மனதை புழியும்
உன் அழுகைக்கும் , உன் கண்ணீருக்கும்
என்னிடம் பதில் இல்லை
என் கண்ணீரே அதற்கு - சாட்சி 


அம்மாவை மன்னித்துவிடு - மகனே
உனக்கு நான் தாலாட்டு பாடியதில்லை
ஒன்றுமே பேசியதில்லை
ஆ , ஊ , ம் அதற்க்கு மேல்
எனக்கொன்ரும் பேசவும் முடியாது

அழுகிற உன்னை ஆறுதல் படுத்த
எனக்கொரு வழியும் கிடையாது
நான் ஒரு ஊமை , நான் ஒரு ஊனம்
என்னை மன்னித்து விடு


No comments:

Post a Comment