Monday, October 31, 2011

பிரியம்

பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாக

பிரிந்திருக்கும் தொலை தூரத்தில்.

சந்தேகங்களும் பயங்களும் சாதாரண உறவினிடை

கொந்தளித்துக் கொண்டிருக்கும் பிரிந்திருந்தால்...

இமைப்பொழுதில் உனை நினைக்கையில்

என்றுமில்லாத எதனையோ இழக்கின்றேன்...

உன் புன்னகையின் மெல்லினத்தை,

உன் அன்பின் ஆழத்தை,

உன் பாசமிகு கரத்தை!

உன்மேல் நான் கொண்ட அன்பு எத்துனை 

வலிமையானது என்பதனை 

உன்னிடம் நிரூபிக்க விடாமல் இந்த தூரமும்

என்னை தொந்தரவு செய்கிறது...


--

No comments:

Post a Comment