பட்டினி தேசம்
பசி... பசி... பசி...
ஓர் உயிரின் அபயக்குரல்...!
உடல் மயிரெல்லாம்
ஒன்று சேர்ந்து சிலிர்த்து
விழிவழியே உப்புநீரை
வரவழைக்கும் மரணக்குரல்...!
ஏனோ வயிற்றில் உருதெரியா
ஓர் வலி...
உயிர்கொல்லும் வலி...
உருவம் காணா உடல்
அதில் ஒட்டிய வயிறு...
மெல்லிய கால்கள்
விரல் தொலைத்த கைகள்
ஒளி மங்கிய கண்கள்...
இதுதான் எங்கள் தேசம்
கண்ணீர்.. உமிழ்நீர்...குடிநீர்...
பேதம் அறியா தேசம்
பட்டினி தேசம்...!
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி...
நீங்கள் எந்த தேசத்தையும்
அழிக்க வேண்டாம்...
எங்கள் தேசத்திற்கு உணவு
அளியுங்கள்...
பட்டினியை அழித்து...
நாங்களும் வாழ்ந்திட
மனிதர்களாக...!
ஓர் உயிரின் அபயக்குரல்...!
உடல் மயிரெல்லாம்
ஒன்று சேர்ந்து சிலிர்த்து
விழிவழியே உப்புநீரை
வரவழைக்கும் மரணக்குரல்...!
ஏனோ வயிற்றில் உருதெரியா
ஓர் வலி...
உயிர்கொல்லும் வலி...
உருவம் காணா உடல்
அதில் ஒட்டிய வயிறு...
மெல்லிய கால்கள்
விரல் தொலைத்த கைகள்
ஒளி மங்கிய கண்கள்...
இதுதான் எங்கள் தேசம்
கண்ணீர்.. உமிழ்நீர்...குடிநீர்...
பேதம் அறியா தேசம்
பட்டினி தேசம்...!
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி...
நீங்கள் எந்த தேசத்தையும்
அழிக்க வேண்டாம்...
எங்கள் தேசத்திற்கு உணவு
அளியுங்கள்...
பட்டினியை அழித்து...
நாங்களும் வாழ்ந்திட
மனிதர்களாக...!
மரம்...? மனிதம்...?
கொட்டும் பனியில்
வெட்டும் குளிரில்
துகிலுரிந்த மரங்கள்
காண்கிறேன்...
துன்பமே அறியாமல்
துயரே நினைவாமல்
துவண்டு விலாமல்
தழைத்திடுவோம் மீண்டும்
என்ற அறைகூவல் என்
காதில் விழுகிறது...
என் மனம் அறிந்த
உண்மை...
கண்கள் மட்டும் உதாசீணம்…
நிழல் தரும்
தருவெங்கே…?
சுவை தரும்
கனியெங்கே…?
மணம் தரும்
மலரெங்கே...?
மனம் தொலைத்த
நானிங்கே...!
இன்றும் தேடுகிறேன்
பதில்...
நான் உதிர்ந்த இலைகளின்
இனமா...?
தழைத்தோங்கும் மரங்களின்
இனமா?
மனிதாபிமானம் இழந்த
மனித இனமா...?
வெட்டும் குளிரில்
துகிலுரிந்த மரங்கள்
காண்கிறேன்...
துன்பமே அறியாமல்
துயரே நினைவாமல்
துவண்டு விலாமல்
தழைத்திடுவோம் மீண்டும்
என்ற அறைகூவல் என்
காதில் விழுகிறது...
என் மனம் அறிந்த
உண்மை...
கண்கள் மட்டும் உதாசீணம்…
நிழல் தரும்
தருவெங்கே…?
சுவை தரும்
கனியெங்கே…?
மணம் தரும்
மலரெங்கே...?
மனம் தொலைத்த
நானிங்கே...!
இன்றும் தேடுகிறேன்
பதில்...
நான் உதிர்ந்த இலைகளின்
இனமா...?
தழைத்தோங்கும் மரங்களின்
இனமா?
மனிதாபிமானம் இழந்த
மனித இனமா...?
வரவேற்பு
இந்த மலர்கள் உன் வருகையை
எதிர்ப்பார்த்து தூவிய
மலர்கள்...
இனி உன்வாழ்வில் வசந்தம்
மணம்வீச தூவிய
மலர்கள்...
நேற்று மனதை வருடிய துன்பம்
இன்றகன்றிட தூவிய
மலர்கள்...
இனியெல்லாம் சுகமே என்று
வாழ்த்திட தூவிய
மலர்கள்...
உன் வருகைக்கு காத்திருந்து
நான் தூவிய அன்பு
மலர்கள்...
எதிர்ப்பார்த்து தூவிய
மலர்கள்...
இனி உன்வாழ்வில் வசந்தம்
மணம்வீச தூவிய
மலர்கள்...
நேற்று மனதை வருடிய துன்பம்
இன்றகன்றிட தூவிய
மலர்கள்...
இனியெல்லாம் சுகமே என்று
வாழ்த்திட தூவிய
மலர்கள்...
உன் வருகைக்கு காத்திருந்து
நான் தூவிய அன்பு
மலர்கள்...
Subscribe to: Posts (Atom)